×

புழல் சிறையில் இருந்தே ஆலங்குளம் தொகுதிக்கு மனுதாக்கல்; ஹரி நாடாருக்கு ரூ.25.76 கோடி சொத்து 11.6 கிலோ தங்கம் கையிருப்பு: ஏமாற்றுதல், மோசடி, கிரிமினல் என 3 மாநிலங்களில் 24 வழக்கு

ஆலங்குளம் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் நெல்லை மாவட்டம் மேலஇலந்தைகுளத்தைச் சேர்ந்த ஹரி நாடார். கழுத்து முழுவதும் நகைகள், கையில் காப்பு என ஒரு மினி நகைக்கடை போல வலம் வருவது தான் அவரது டிரேட் மார்க். தற்போது வழக்கில் சிக்கி சென்னை புழல் சிறையில் உள்ள ஹரி நாடார் சிறையில் இருந்து கொண்டே ஆலங்குளம் தொகுதியில் 2ம் முறையாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு தாக்கலுடன் குற்ற வழக்குகள், சொத்துக்கள் மற்றும் தன்னிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஹரி நாடாரிடம் பார்ச்சுனர், இன்னோவா கிரிஸ்டா, டாடா சபாரி, மகேந்திரா எஸ்யுவி என 4 கார்கள், ஒரு டெம்போ டிராவலர், ஒரு பொலிரோ ஜீப் ஆகியவை உள்ளது. அவர் மீது நெல்லை, எழும்பூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு கிரிமினல் வழக்குகள், கேரளா, கர்நாடகத்தில் ஏமாற்றுதல், மோசடி வழக்குகள் என மொத்தம் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 24 வழக்குகளும் 3 மாநிலங்களின் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.

ஹரி நாடாரிடம் தங்கம் மட்டும் 11 கிலோ 650 கிராம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.17 கோடியே 6 லட்சத்து 84 ஆயிரத்து 150. கையில் ரூ.2.50 லட்சம் ரொக்கம் உள்ளது. மொத்தம் அவரிடம் ரூ.25 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 150 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும், 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ஹரி நாடார் தனது அபிடவிட்டில் தன்னை பிசினஸ்மேன் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 – 21ல் மட்டும் வருமான வரியாக ரூ.1 கோடியே 52 லட்சம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு முழுவதும் சிறையில் இருந்ததால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வருமான வரி செலுத்தவில்லை என தெரிவித்து உள்ளார். ஹரி நாடாரின் மனைவி சாலினி. இருவருக்கும் விவாகரத்து தொடர்பான வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் 2020 முதல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Worm Prison ,Alangulam ,Hari Nadar ,Nella District ,Alankulam ,
× RELATED தேர்தலில் போட்டியிடுவாரா அண்ணாமலை? – பாஜக தலைமை இன்று இறுதி முடிவு