×

உத்திரமேரூரில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து பலி

உத்திரமேரூர், ஏப்.3: உத்திரமேரூர் அடுத்த, காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சாலாட்சி (80). இவர் வயது மூப்பு காரணமாக, நேற்று உடல் பரிசோதனை செய்ய உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, சிகிச்சை பெற்றுவிட்டு காட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபரிடம் லிப்டு கேட்டு சென்றுள்ளார். அப்போது, அங்காளம்மன் கோயில் அருகே எதிர்பாராத விதமாக மூதாட்டி அஞ்சாலாட்சி பைக்கில் இருந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அஞ்சாலாட்சியை அப்பகுதி மக்கள் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஞ்சாலாட்சியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uthiramerur ,Anjalaakshi ,Kattupakkam ,Uthiramerur Government Hospital ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை...