×

2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சித் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்த கவலைக்குரிய தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, 2021 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் மட்டும் மொத்தம் 37,740 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாட்டு மண்ணில் உயிரிழக்கின்றனர். மொத்த உயிரிழப்புகளில் சுமார் 86% வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

நாடுகள் வாரியாக உயிரிழப்பு (2021 – 2025):
ஐக்கிய அரபு அமீரகம் (UAE): 12,380 பேர்.
சவுதி அரேபியா: 11,757 பேர்.
குவைத்: 3,890 பேர்.
ஓமன்: 2,821 பேர்.
மலேசியா: 1,915 பேர்.

அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2021-ல் அதிகபட்சமாக 8,234 பேர் உயிரிழந்துள்ளனர். 2022-ல் 6,614 ஆகக் குறைந்த நிலையில், அதன் பின்னர் உயிரிழப்புகள் படிப்படியாக அதிகரித்து 2025-ல் 7,854 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கான காரணங்கள் குறித்து அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : EU Government ,Delhi ,Ministry of External Affairs ,Parliament ,Indians ,
× RELATED ஆம் ஆத்மி ஆட்சியில் பொருத்தப்பட்ட1.5...