- விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி
- திமுக
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- ஏஎம்வி
- பிரபாகர் ராஜா
- விருகம்பாக்கம்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
சென்னை: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜாவின் தலைமை பணிமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா தொடர்ந்து 2வது முறையாக போட்டியிடுகிறார். தொடர்ந்து அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவின் தேர்தல் தலைமை பணிமனை திறப்பு விழா நடந்தது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக அமைப்பு துணைச் செயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ, கணக்கு நிலைக்குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் க. தனசேகரன், பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர்கள் கே.கண்ணன், மு.ராசா, மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், மாவட்டத் துணைச் செயலாளர் வாசுகி பாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உ.துரைராஜ், எஸ்.டி. தங்கராஜ், பி.எஸ். முருகேசன் மற்றும் தோழமை இயக்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பகுதி செயலாளர் பகுதி தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
