தெஹ்ரான்: உண்மையிலேயே அமெரிக்க அரசின் முன்னுரிமை, அமெரிக்காவுக்கு முதலிடம் என்ற கொள்கையை பிரதிபலிக்கிறதா..? என ஈரான் அதிபர் பெசஸ்கியான் கேள்வி யெழுப்பியுள்ளார். ஒன்றுமறியாத பள்ளி குழந்தைகளை கொல்வதும் புற்றுநோய் சிகிச்சை மையத்தை அழிப்பதும் அமெரிக்க பெயரையே கெடுக்கும் என அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் யாருடைய நலனுக்காக ஈரான் மீது போர் தொடுத்தன என்று அதிபர் பெசஸ்கியான் கேள்வி. ஏராளமான புரட்டுகள், கற்பனைகயான காரணங்களை திரட்டி அமெரிக்கா நடத்தும் போருக்கான நோக்கத்தை பார்க்க வேண்டும். அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் பெசஸ்கியான் எழுதியுள்ள திறந்த மடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குண்டு மழை பொழிந்து ஈரானை கற்காலத்துக்கு தள்ளிவிடுவோம் என்று அதிபர் டிரம்பின் பேச்சு அமெரிக்காவுக்கு பெருமை தருமா? அணு ஆராய்ச்சி தொடர்பாக பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோதே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது சரியா? ஈரானின் எரிசக்தி நிலையங்களையும் தொழறிச்சாலைகளையும் அமெரிக்கா குண்டு வீசி அழிப்பது மக்களையே தாக்குவதாகும். ஈரானின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா தாக்குவது போர்க் குற்றம் என்றும் அதிபர் பெசஸ்கியான் கூறியுள்ளார்.
