சென்னை: அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. அவர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் என நீண்ட காலம் சிறையில் இருப்போரை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
