சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 3 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
