தலைநகர் சென்னைக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ச்சி; 5ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,000 கோடியில் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி தொகுதி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, துறையூர், முசிறி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 3 வாரத்துக்கு முன்புதான் திருச்சிக்கு மாபெரும் மாநில மாநாட்டுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவதுபோல் திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும். 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தந்தார்கள். 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து 2 அமைச்சர்களை பெற்று தந்தீர்கள்.

இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும். விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சியின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திருச்சிக்காக ரூ.26,000 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 327 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும். காலை உணவுத் திட்டத்தை 8ம் வகுப்புவரை விரிவுபடுத்த வாக்குறுதி அளித்துள்ளோம். காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் மேலும் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக்கு தேவையான ஃபிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை வாங்க ரூ.8000 கூப்பன் வழங்கப்படும். ரூ.8000 கூப்பன் மூலம் இல்லத்தரசிகள் தங்களுக்கு பிடித்த கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

அதிமுக ஆட்சியில் கொடுத்த மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை பழைய பொருள் கடைகளில் இருக்கின்றன. திமுக ஆட்சியில் கொடுத்த கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்னும் வீடுகளில் இருக்கின்றன. காலை உணவுத் திட்டம் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டம்; நான் முதல்வன் திட்டமும் கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதி என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் ஜாதி கலவரங்கள் இல்லை, பாஜக ஆளும் மாநிலங்கள்போல மதக் கலவரங்கள் இல்லை. அதிமுக-பாஜக கூட்டணிக்கு வழக்கம்போல் மக்கள் படுதோல்வியை பரிசாக தர வேண்டும். சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்தியவர் பழனிசாமி.

அண்ணாவை அசிங்கப்படுத்துவதை பழனிசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தனது பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று பாஜகவின் பாதங்களை தாங்கிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி; குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து அதை நிறைவேற துணைபோன கட்சி அதிமுக தான். அதிமுக, பாமகாவால் தான் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் நிறைவேறியது. குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது என்று சொன்னவர்தான் பழனிசாமி. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார் என்று கேட்டவர்தான் பழனிசாமி.

சிறுபான்மை வாக்குக்காக 2024 தேர்தலில் தனித்து போட்டி என்று நாடகமாடியவர்தான் பழனிசாமி; குடியுரிமை சட்டத்தை பழனிசாமி இப்போது ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். போராடிய விவசாயிகளை புரோக்கர் என்று கூறி அவர்களை கொச்சைப்படுத்தியவர் பழனிசாமி; எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாகவே மாறிவிட்டார். அதிமுக கூட்டணியில் பிரச்சனை என்றால் ஏன் அத்தனை முறை டெல்லிக்கு சென்றீர்கள்? பழனிசாமியை முதலமைச்சராக்குவோம் என்று மோடி இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்றால் ஏன் தாமரை சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன? தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் சி.ஏ.ஏ. சட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்பதை இப்போது வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்துக்கு எடுத்து முதலமைச்சரானவர் எடப்பாடி; மீண்டும் எடப்பாடியிடம் ஆட்சி போனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் |டெல்லியிடம் விற்றுவிடுவார்பாஜக தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்தால் நோட்டாவுக்கு கீழே மக்கள் தள்ளிவிடுவார்கள் என்பதால் முகமூடி அணிந்து வந்துள்ளது

நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிதியை ஒன்றிய அரசு முறையாக விடுவிக்கவில்லைஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்துள்ள திட்டங்கள் என்று பிரதமர் மோடி எதையாவது குறிப்பிட்டாரா? தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் மோடி ஒரு வாரம் தங்கியிருந்து திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் எப்போதும் டூர் மோடிலேயே இருக்கும் பிரதமருக்கு தமிழ்நாட்டின் சாதனைகள் தெரிந்திருக்காதுபிரதமர் மோடியால் பாஜகவின் திட்டங்கள் எதையாவது பட்டியலிட முடிந்ததா?

தமிழ்நாடு வன்முறை காடாக மாறக்கூடாது உ.பி., மணிப்பூர்போல் தமிழ்நாடு வன்முறை காடாக மாறிவிடக் கூடாதென்றால் திமுக ஆட்சி மலர வேண்டும். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக என்று கூறினார்.

Related Stories: