மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50% உயர்த்துவதால் வடமாநிலங்களே பயன்பெறும், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா: எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வடமாநிலங்களுக்கு ஒருதலைப்பட்சமாகப் பயனளிக்கும் என்றும், அதேவேளையில் தெற்கு மாநிலங்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2029 மக்களவைத் தேர்தலிலும் அதற்குப் பிறகு நடத்தப்படவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு அதாவது 33% விழுக்காடு இடங்களை ஒதுக்குவதற்கான இரண்டு மசோதாக்களை நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுவருகிறது. 33% மகளிர் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும்போது ஆண்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தொகுதி மறுவரையரை செய்து, மக்களவையின் மொத்த இடங்களை 50 விழுக்காடு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது உள்ள 543இலிருந்து 816ஆக அதிகரிக்கப்படும். இதில் பெண்களுக்கு 269 அல்லது 270 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் தற்போது 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்; 50% அதிகரிப்புடன் இந்த எண்ணிக்கை 120 இடங்களாக உயரும். தற்போது 17 இடங்களைக் கொண்டுள்ள தெலங்கானா, வெறும் 26 இடங்களாக மட்டுமே உயரும். தற்போதுள்ள கட்டமைப்பின் கீழ், இரு மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 63 இடங்களாக உள்ளது; 50% அதிகரிப்பு மாதிரியின் கீழ், இந்த வித்தியாசம் 94 இடங்களாக விரிவடைந்து, உத்தரப் பிரதேசத்திற்கு தேவையற்ற சாதகத்தையும் செல்வாக்கையும் அளிக்கும் என தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.

Related Stories: