×

திருவொற்றியூர் அதிமுக பிரசார கூட்டத்தில் முதல்வரின் சாதனைகளை குறைகூறியதால் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பெண்கள்: எடப்பாடி பழனிசாமி டென்ஷன்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று, திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். அப்போது கே.குப்பன், மாதவரம் தொகுதி வேட்பாளர் மாதவரம் வீ.மூர்த்தி ஆகியோருக்கு வாக்களிக்கவேண்டும் என்று கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது எடப்பாடி, ‘’அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட திட்டங்களையும் சலுகைகளையும் பட்டியலிட்டு வாக்கு கேட்டார்.

இந்த நிலையில், இந்த பிரசார கூட்டத்துக்கு திருவொற்றியூர், எண்ணூர், மணலி, சின்னசேக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆட்கள் வரவழைத்துவந்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் கைகளில் அதிமுக கொடிகள், பதாகைகளையும் ஏந்தி எடப்பாடியின் பேச்சை கேட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்று தெரிவித்து அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று எடப்பாடி பேசினார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த பெண்கள் சாரை, சாரையாக எழுந்து சென்றனர். அவர் பேசி முடிக்கும்போது பெரும்பாலான பெண்கள் இல்லாததால் எடப்பாடி கடும் விரக்தியடைந்தார்.

இதுகுறித்து பெண் ஒருவர் கூறுகையில், ‘’மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை அதனுடன் முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய், இலவசமாக பேருந்து பயணம், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகை, இப்படி எண்ணற்ற திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். திருவொற்றியூர் தொகுதியில் கல்லூரி மற்றும் ஏராளமான பள்ளி கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. பாலிடெக்னிக், ரயில்வே சுரங்கப்பாதை, மார்க்கெட் வளாகம், நூலகம், மழைக்கால பேரிடர் தடுப்பு நடவடிக்கை, படகு குழாம் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு திட்டங்கள் வெளிப்படையாக செயல்பட்டது அனைவருக்கும் தெரிந்தது.

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செய்ய செய்யவில்லை. பொதுமக்களுக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதையுமே செய்யவில்லை என்று எடப்பாடி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் கூட்டத்தில் இருந்து பெண்கள் சென்றுவிட்டனர்’’ என்றார்.

Tags : TIRUVATIYUR ,ADAMUKA ,EDAPPADI PALANISAMI TENSHAN ,Thiruvotiyur ,Chennai ,Thiruvotiyur Constituency ,K. Akkatsi ,Secretary General ,Edappadi K. Palanisami ,Thiruvotiyur Teradi ,K. Kuppan ,Madhavaram ,Constituency ,Madhavaram V. Murthy ,
× RELATED சொல்லிட்டாங்க…