×

30ம்தேதி காணொலி மூலம் பாஜ நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை புதுச்சேரி தேர்தல் பிரசாரத்துக்கு மோடி அமித்ஷா, ராகுல் அடுத்தடுத்து வருகை

 

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 9ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏப்., மாதம் 6ம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகிறார். திருக்கனூர் கடைவீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு நமச்சிவாயத்தை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி ஏப். 3ம்தேதி வருகையை தொடர்ந்து அமித்ஷாவும் வருவதால் புதுச்சேரியில் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி 30ம்தேதி காணொலி வாயிலாக நடைபெறும், பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு்ள்ள டிவிட்டர் பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவே புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி, புதுச்சேரி நிகழ்ச்சியில் மார்ச் 30ம்தேதி (நாளை மறுநாள்) மாலை 5.30 மணிக்கு பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கட்சி தலைமை விரைவில் அறிவிக்க உள்ளது. அதேபோல் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரத்துக்கு அடுத்த வாரங்களில் வருகை தர உள்ளதால் புதுச்சேரி தேர்தல்களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

Tags : PM ,Puducherry ,Bajaj ,Modi Amitsha ,Rahul ,9th. N. ,National Democratic Alliance ,Congress ,BJP ,Adimuka ,Lajaka ,Minister ,Namachiwai ,
× RELATED திமுக கூட்டணியில் மதிமுக...