லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், கடையில் இருந்த பொருட்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
