கோவை மின்வாரிய அலுவலகங்களில் ஆன்லைன் மின் கட்டணம், புதிய மின் இணைப்பு சேவை 2 நாட்களுக்கு இல்லை

கோவை,மார்ச்27: கோவை மண்டலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது மற்றும் புதிய மின் இணைப்பு சேவைக்கு விண்ணப்பித்தல் பணிகள் நாளை(28ம் தேதி) மற்றும் 29ம் தேதி என இரண்டு நாட்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சாந்த நாயகி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் வகையில் கணினி தரவு வழங்கிகளை படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், கோவை மண்டலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் இணையவழி மின் கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் நாளை (28ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (29-ம் தேதி) வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: