வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி; பிளாட்பார உணவகங்களில் 40 சதவீதம் விலை உயர்வு

மாதவரம்: ஈரான்-இஸ்ரேல், அமெரிக்காக போர் காரணமாக கேஸ் சிலிண்டர், வாகன கேஸ் ஆகியவற்றுக்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது வணிக சிலிண்டர்கள் கிடைக்காததால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. சிறு உணவக வியாபாரிகள் சிலர் விறகு கட்டைகளை பயன்படுத்தி சமைத்து விற்பனை செய்கின்றனர். கடந்த 3 வாரங்களுக்கு மேலாக வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்து வருவதால் ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தினக்கூலிகள், தொழிலாளர்கள் ஆகியோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கூலி தொழிலாளர்களுக்கு தினமும் சுமார் 500 ரூபாய் செலவு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘’சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும்’’ என சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘’வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் புக் செய்தாலும் 25 நாட்கள் கழித்துதான் கிடைக்கக்கூடிய நிலைமை உள்ளது. வீட்டில் சமைக்க முடியாத ஏழை, எளிய மக்கள் ஓட்டல்களில் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களும் உணவுகளின் விலையை அதிகரித்துவிட்டனர். சாலையோர கடைகளில் 10 ரூபாய்க்கு விற்ற இட்லி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட உணவு 160க்கும் உயரக ஓட்டல்களில் இது இன்னும் அதிகமாகவும் விற்கப்படுகிறது. எனவே சமையல் சிலிண்டர், வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: