×

சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான நீதிக்களம் கருத்தரங்கு

 

சென்னை: விஐடி பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து ‘நீதிக்களம்’ என்ற இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. வளர்ச்சியடைந்த இந்தியாவில் சட்டத்துறையி்ன் பங்களிப்பு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு சட்டக்கல்லூரிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வி.ஐ.டி. பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் வரவேற்றார். கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழக கவர்னர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கருத்தரங்கில் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவர்னர் பேசியதாவது:  வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய வேண்டும் என்றால் நீதித்துறையும் வளர வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்தால்தான் உண்மையான வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க முடியும். இளைஞர்கள் ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும். மனிதநேயமற்ற சமூகம் முன்னேறிய சமூகமாக கருதப்படாது. அதனால், மாணவர்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டு எளிய மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

விழாவில் கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு பேசும்போது, “நாடு வளர்ச்சி அடைய மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்” என்றார்.
விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, நீதித்துறையினை ஏழைகள் அணுகக்கூடிய சூழல் இல்லை. வசதிப்படைத்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய நிலை உள்ளது. உயர்கல்வி வளர்ச்சிக்காக அரசு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இளைஞர்கள் இந்தியாவின் பலமாக விளங்கி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு சிறந்த உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

கருத்தரங்கின் தொடக்க விழாவில், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். கருத்தரங்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.மதி, டி.பரத சக்கரவர்த்தி, எல்.சி.விக்டோரியா கவுரி, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.

Tags : Chennai ,VIT University ,National Level Seminar on Judiciary ,Tamil Nadu Law College Students' Association ,Tamil Nadu… ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மிக உயரமான...