சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கையெழுத்தானது: பாஜக 27 பாமக 18 அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு

 

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கையெழுத்தானது. பாஜக சார்பில் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்த பாமக தலைவர் அன்புமணி அதிமுக அலுவலகம் வந்தார். நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கிட்டு உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தானது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாமகவுக்கு ஏற்கனவே மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 27 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 2021 சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 18 தொகுதிகள் ஒதுக்கீடு. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுகவுக்கு மொத்தமாக 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசாங்கத் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி நேற்று முறியடித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ், தொலைநோக்குத் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு வலிமையான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை ஏற்க தற்போது தமிழ்நாடு தயாராக உள்ளது. வருங்கால முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவுள்ள ஒரு அரசையே தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

அந்த அரசாங்கம் விவசாயிகள், மீனவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்துறையினருக்கு வளர்ச்சியைப் பெற்றுத்தரும். நமது இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும். தரமான மருத்துவம் மற்றும் கல்வியை உறுதி செய்யும். ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை அமைத்துத் தரும். வாழ்வில் அனைவரும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்து, ஒரு வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க அயராது பாடுபடும்.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், நயினார் நாகேந்திரன், எல். முருகன், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து கலந்தாலோசித்து, தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை இன்றே உங்களுக்குத் தெரிவிப்போம்.

அனைத்து கூட்டணிக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து, பிரதமரின் தமிழக தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்து முடிவெடுப்போம். இந்தத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை வழங்கும்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் பாமகவுக்கு 18 தொகுதிகள், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர்

 

Related Stories: