இரவுக்குள் மீதமுள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு: எடப்பாடி பழனிசாமி பேட்டி

 

சென்னை: இரவுக்குள் மீதமுள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பின்னர் தே.ஜ.கூ. தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்தது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; பாஜகவுக்கு 27, அன்புமணி பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மற்ற கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கூட்டணியில் தொகுதி உடன்பாட்டை விரைவில் முடித்துள்ளோம். எங்கள் கூட்டணி உணர்வுப்பூர்வமான கூட்டணி. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. இன்னும் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று இரவுக்குள் சுமுகமாக பேச்சு முடிந்து தொகுதி உடன்பாடு எட்டப்படும். கருத்து பரிமாற்றம் செய்யவே டெல்லி சென்றோம். தொகுதி உடன்பாடு முடிந்தபின்பு, அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அறிவிப்போம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

Related Stories: