×

மங்களூரு துறைமுகம் வந்தது அமெரிக்க எரிவாயு கப்பல்

 

மங்களூரு: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம் எரிவாயு வந்து இறங்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், சிங்கப்பூர் நாட்டின் கொடியுடன் ‘பைக்ஸிஸ் பயனியர்’ என்ற பிரம்மாண்ட கப்பல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுகத்திலிருந்து சுமார் 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 6 மணி அளவில், அந்த கப்பல் மங்களூரு புதிய துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இங்கிருந்து கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் உள்ள எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விநியோகம் செய்யப்பட உள்ளது.

 

Tags : US ,Mangalore port ,Mangalore ,West Asia ,Strait of Hormuz ,India… ,
× RELATED அசாமில் 2 காங்கிரஸ் இடையே போட்டி: மாநில தலைவர் கவுரவ் கோகாய் பேட்டி