டெல்லி: மத்திய கிழக்குப் போரால் பாதிக்கப்பட்டுள்ள எரிசக்தி, உரங்கள், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளின் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. LNG தட்டுப்பாடு நீடித்தால் மழைக்கால பயிர்களை விதைக்கும் பருவத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
