வேலூர்: வேலூரில் பறக்கும் படை சோதனையின்போது, கார் நிற்காமல் சென்ற விவகாரத்தில் பெண் மேயர் உட்பட 3 பேர் நாளை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோயில் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் கடந்த 19ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த நீலநிற காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், காரை சோதனையிடும் முன் வேகமாக கார் சென்று விட்டது. இதனால் கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிலை கண்காணிப்பு குழு பொறுப்பாளர் சதீஷ்வேலன் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த காரை ஓட்டிய டிரைவர் கோபி, கவுன்சிலர் சதீஷ், மேயர் சுஜாதா உள்பட 3 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி மேயர் சுஜாதா உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
