×

பெண்களுடன் இருப்பது போன்ற ஐபிஎஸ் அதிகாரியின் வீடியோ உண்மையானது: தடயவியல் ஆய்வு அறிக்கை தகவல்

 

பெங்களூரு: கர்நாடகாவை உலுக்கிய தங்க கடத்தலில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவ் விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில் அவருக்கு உதவியதாக தந்தை ராமச்சந்திரராவ் , போலீஸ் துறை ரீதியான விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 2016-17ல் பெலகாவி மண்டல ஐஜிபியாக ராமச்சந்திர ராவ் பதவி வகித்த போது பெண்களுடன் அலுவலகத்தில் உல்லாசமாக இருக்கும் காட்சி வைரலானது. இதனால், மாநில அரசு , ராமச்சந்திர ராவுக்கு கட்டாய விடுப்பு அளித்தது அத்துடன் தற்காலிக பணி நீக்கமும் செய்தது. இந்த சம்பவம் போலீஸ் துறையில் பரபரப்பாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசின் சார்பில் ஏடிஜிபி ஆர். ஹிதேந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ராமச்சந்திர ராவ் வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அத்துடன் அவருடன் இருந்ததாக கூறப்படும் பெண்களிடம் விசாரித்த போது அது உண்மை என்பது தெரிய வந்தது. அது போல் தடயவியல் ஆய்வில் வீடியோ உண்மையானது என்பதும் உறுதி செய்யப்பட்டது. போலீஸ் துறையில் இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டதால் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது துறை ரீதியாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும் அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Tags : IPS ,Bengaluru ,Ranya Rao ,Karnataka ,Ramachandra Rao ,Belagavi ,
× RELATED ஆந்திரா ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய்: அமைச்சர் தகவல்