டெல்லி: சீனாவுக்குச் செல்லவிருந்த ரஷ்யாவின் Aqua Titan கப்பல், 7.7 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்து கொண்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 21ம் தேதி அந்தக் கப்பல் மங்களூர் துறைமுகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் பல ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் இந்தியப் பயன்பாட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
