×

மேற்குவங்கத்தில் நீடிக்கும் அதிரடி 13 ஐஏஎஸ், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்பட ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தூக்கியடித்து வருகிறது. நேற்று மேலும் 13 ஐஏஎஸ் மற்றும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் 13 மாவட்டங்களில் இருந்து கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தான் அந்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாக இருந்தனர்.

அவர்களை மாற்றி புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜிதின் யாதவ் (கூச் பெஹார்), சந்தீப் கோஷ் (ஜல்பைகுரி), விவேக் குமார் (வட தினஜ்பூர்), ராஜன்வீர் சிங் கபூர் (மால்டா), ஆர். அர்ஜுன் (முர்ஷிதாபாத்), காந்த் பல்லி (நாடியா), ஸ்வேதா அகர்வால் (பூர்பா பர்தமான்), ஷில்பா கோரிசாரியா (வடக்கு 24 பர்கானாஸ்), அபிஷேக் குமார் திவாரி (தெற்கு 24 பர்கானாஸ்) , ஹரிசங்கர் பணிக்கர் (டார்ஜிலிங்), டி. பாலசுப்பிரமணியன் (அலிபுர்துவார்) ஆகியோர் புதிய கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்மிதா பாண்டே கொல்கத்தா மாநகராட்சியின் ஆணையராகவும், ரந்தீர் குமார், கொல்கத்தா தெற்கு பகுதியின் மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் 5 டிஐஜிக்கள் மாற்றப்பட்டுள்ளனர். ரத்தோட் அமித்குமார் பாரத், ராய்கஞ்ச் சரகத்தின் டிஐஜியாகவும், அஜித் சிங் யாதவ், முர்ஷிதாபாத் சரகத்தின் டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீஹரி பாண்டே, பர்தமான் சரகத்தின் டிஐஜியாகவும், கங்கர் பிரசாத், பாருய் பிரசிடென்சி சரகத்தின் டிஐஜியாகவும், அஞ்சலி சிங், ஜல்பைகுரி சரகத்தின் டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : West Bengal ,Chief Election Commission ,Assembly ,IAS ,IPS ,Chief Secretary ,
× RELATED வருமானத்திற்கு அதிகமாக சொத்து...