×

ஐம்பதுக்கு பிறகும் வாழ்க்கை நமதே!

நன்றி குங்குமம் டாக்டர்

செவ்விது செவ்விது பெண்மை!

50-55 வயது என்பது வாழ்க்கை கிட்டதட்ட முழுமையை அடைந்திருக்கும் வயது. இதனால் பெண்களுக்கு உடலாலும் மனதாலும் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். இந்த வயதுப் பெண்களின் மனசு & சமூக அனுபவங்கள் பற்றி ஓர் உரையாடலைத் தொடங்குவோம்.50 முதல் 55 வயது வரை பெண்களின் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகிறது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விடுகிறார்கள், வீட்டுப் பொறுப்புகள் கொஞ்சம் குறைகிறது. ஆனால் இதே நேரத்தில், மனதில் சில குழப்பங்கள், வெறுமை உணர்வு, “நான் இப்போ என்ன?” என்ற கேள்வியும் வரும்.

சமூகத்தில் இருந்து வரும் பேச்சுகள், குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் – இவை எல்லாம் பெண்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பாதிக்கலாம்.
இந்த வயது முடிவு அல்ல; இன்னும் நல்ல வாழ்க்கையை அமைக்க முடியும் என்ற நினைவூட்டலாக இந்த உரையாடல் அமைந்துள்ளது.லதா: மாலா, இப்போ சில நாட்களா மனசு சும்மா வெறுமையா இருக்கு.

மாலா: ஏன் லதா? என்ன ஆச்சு?

லதா: வீட்டில் எல்லாரும் இருக்காங்க. ஆனா எனக்கு மட்டும் யாரும் கவனிக்காத மாதிரி தோணுது.

மாலா: அது ரொம்ப பெண்களுக்கு வரும் உணர்வு. பிள்ளைகள் பெரியவர்கள் ஆகுறாங்க, வேலைகள் குறைஞ்சதும் இப்படிதான் இருக்கும்.

1. “இந்த வயசுல வேண்டாம்” என்ற பேச்சு

லதா: நான் ஒரு நாள் வெளியூர் போகணும்னு சொன்னேன். உடனே “இந்த வயசுல எதுக்கு?”ன்னு கேட்டாங்க.

மாலா: ஹா… நம்ம ஆசைக்கு வயசு பார்த்து தடை வைக்கிறாங்க. ஆனா நமக்கும் விருப்பம் இருக்காதா?

லதா: அதான்… சில நேரம் நம்மையே சந்தேகப்படுவோம்.

2. குடும்பத்தில் நம்ம இடம்

மாலா: எனக்கும் ஒரு feeling வரும். முன்பு எல்லாத்துக்கும் என் கருத்து கேட்டாங்க. இப்போ கொஞ்சம் குறைஞ்ச மாதிரி.

லதா: அது கஷ்டமா இருக்கும்.

மாலா: அதனால்தான் நான் openஆ பேச ஆரம்பிச்சேன். “எனக்கு இப்படி தோணுது”ன்னு சொன்னா புரியும்.

3. தனிமை

லதா: சில நேரம் ரொம்ப தனியா இருப்பது போல.

மாலா: அதனால்தான் நான் பெண்கள் குழு போக ஆரம்பிச்சேன். அங்கே பேசினா மனசு லேசா ஆகுது.
லதா: நம்ம வயசு பெண்கள் கூட இருந்தா கொஞ்சம் செளகர்யமா இருக்கும் இல்லையா?

மாலா: யெஸ். எக்சாட்லி.

4. உடல் மாற்றங்கள்

லதா: உடம்புல மாற்றம் வந்தாச்சு. முன்போல இல்லைன்னு தோணும்.

மாலா: அது இயல்பு லதா. இந்த வயசுல எல்லாருக்கும் வரும். நம்ம உடம்பை வெறுக்க வேண்டாம், கவனிக்கணும்.

லதா: நான் யோகா போலாம்னு நினைச்சேன்.

மாலா: ரொம்ப நல்லது. உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.

5. “எனக்காக நேரம் எடுத்துக்கறேனா?” என்ற குற்றவுணர்வு

லதா: சில நேரங்களில் எனக்காக ஏதாவது பண்ணினா குற்றவுணர்வு வரும்.

மாலா: அது தவறு இல்லை. நாம சந்தோஷமா இருந்தா வீட்டாருக்கும் நல்லது.

6. மக்கள் என்ன சொல்வாங்க?

லதா: வெளியே ஏதாவது புதியது பண்ணினா உடனே கருத்து சொல்றது.

மாலா: மக்கள் எப்போவும் பேசுவாங்க. நம்ம வாழ்க்கை நமதேன்னு நிம்மதியா இருக்கணும்.

7. புதிய தொடக்கம்

லதா: இந்த வயசுல புதுசா ஆரம்பிக்கலாமா?

மாலா: ஏன் முடியாது? புதிய ஹாபி (hobby), வேலை, எல்லாம் செய்யலாம்.

லதா: உண்மை… இப்போதான் நமக்கு கொஞ்சம் நேரம் கிடைக்குது.

முடிவு:

லதா: மாலா, பேசினதாலே மனசு லேசா இருக்கு.

மாலா: நினைச்சுக்கோ… வயசு கூடலாம், ஆனா வாழ்க்கையை நிறுத்தக் கூடாது.

லதா: சரி. நாமும் இன்னும் சந்தோஷமா வாழலாம்.

எளிய வழிகள்

*குடும்பத்துடன் மனம் பகிர்ந்து பேசுங்கள்
*நண்பர்கள் / பெண்கள் குழு சேருங்கள்
*தினமும் சிறிது உடற்பயிற்சி
*பிடித்த விஷயங்களை செய்யுங்கள்
*மக்கள் பேச்சை அதிகம் கவலைப்படாதீர்கள்
*“நான் முக்கியம்” என்று நினையுங்கள்.

மெசேஜ்:

“50க்கு அப்புறமும் கனவுகளுக்கு எல்லை இல்லை.”

தொகுப்பு: மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி

Tags : Kumkum ,Dr. ,Sevvidhu ,
× RELATED காது வலிக்கான காரணங்களும் தீர்வுகளும்!