×

மகனை கொன்று தாய் தற்கொலை: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் விபரீதம்

திருமலை: காஸ் அடுப்பில் வெந்நீர் வைத்ததை கணவர் திட்டியதால் மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போரபண்டா பெத்தம்மா நகர் சமூகக்கூடம் பகுதியை சேர்ந்தவர் முரளிவேணு (38), மின்வாரிய ஊழியர். இவரது மனைவி சத்யவாணி (33). மகன் ருத்ராம்ஷ் (5), மகள் தன்விகா (2). கடந்த 13ம்தேதி சத்யவாணி, காஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். இதை பார்த்த முரளிவேணு, `நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளது. ஆனால் நீ காஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளாயே?’ என்று மனைவியை திட்டியுள்ளார். இதனால் தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முரளிவேணு, பைக்கில் வெளியே சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த சத்யவாணி தனது 2 குழந்தைகளையும் கொல்ல கழுத்தை நெரித்துள்ளார். இதில் 2 குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். பின்னர் அதே அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு சத்யவாணி தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய முரளிவேணு, தனது மனைவி சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

மேலும் மயங்கிய நிலையில் இருந்த தனது 2 குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ருத்ராம்ஷ் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தன்விகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tirumala ,Muralivenu ,Samakkoodam ,Bethamma Nagar, Borabanda, Hyderabad, Telangana ,Electricity Board ,Satyavani ,
× RELATED சர்ச்சுக்குள் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: பாதிரியார் கைது