- அஇஅதிமுக
- எடப்பாடி
- OPS
- விலாசல்
- திமுக
- கோவில்பட்டி
- விளாத்திகுளம்
- கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஓ. பன்னீர்செல்வம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நேற்று நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘திமுக கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே போகவில்லை. நிரந்தர கூட்டணியாக உள்ளது. தேமுதிக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்த போது, ராஜ்யசபா உறுப்பினர் இடம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதை எடப்பாடி பழனிசாமி துச்சமாக தூக்கி எறிந்தார்.
ஆனால் திமுக கூட்டணியில் இணைந்தவுடன் ஒப்பந்தம் போடாமலேயே ராஜ்யசபா சீட்டு வழங்கப்பட்டு இருக்கிறது. அதுதான் அரசியல் பண்பாடு. பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் இவர்கள் எல்லாம் மக்களால் ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆனவர்கள். நான் உட்பட மற்றவர்கள் (எடப்பாடி) எல்லாம் அப்பாயின்மென்ட். எனக்கு ஒருவர் எச்சரிக்கை விடுகிறார்.
அவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார். எனக்கு அவர் பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. பழனிசாமி குறித்து பேசக் கூடாது என எனக்கு எச்சரிக்கை விடுக்கிறார். திமுகவில் நான் சாதாரண தொண்டன். நான் உழைத்தால் தான் எனக்கு பதவி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை நிற்க சொல்லி வற்புறுத்தி நிற்க வைத்தனர். அப்போது என்னை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம் என்ற 6 பேரை பிடித்து நிற்க வைத்தனர். ஆனால் அதில் அதிமுக டெபாசிட் இழந்தது. அதிமுகவை குழி தோண்டி புதைத்தது எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாகுமாரும் தான். எனக்கு எச்சரிக்கை விடுக்க உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?
பேசு பா..பேசு.. நீ எப்படி கட்சிக்கு வந்த..? யாரால் வந்த..? நீ தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி எப்படி ஊர்ந்து ஊர்ந்து சென்று, சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றுக் கொண்டு, தற்போது சசிகலாவை பார்த்து, எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று சொல்கிறார். அப்படி சொல்லலாமா…? எடப்பாடியும், உதயகுமாரும் மண்வெட்டியை எடுத்து அதிமுகவை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். அதிமுகவை அழித்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயகுமாரையே சாரும். என்னைப் பற்றியோ, நான் நடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
