திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகளில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்கால துவங்கியதில் கடுமையாக வெயில் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு மேலாகவே கடுமையாக வெயில் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் வத்தலக்குண்டு புறவழிச்சாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சாலையில் இருந்து பார்த்தால் சுமார் 50அடி உயரத்துக்கு கரும்புகையாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள், வாகனஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சென்ற பார்த்தபொழுது டயர் கழிவுகள், டீசல் துடைக்கப்பட்ட துணி கழிவுகள், குப்பைகளில் இருந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தால் பொருட்சேதமும், உயிர்சேதமும், ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் எல்லாரும் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என அச்சத்திற்கு உள்ளாகினர்.
