- கூடலூர்
- முல்லைப் பெரியாறு ஆறு
- காஞ்சிமரத்துரை, கூடலூர்
- சதீஷ்குமார்
- கருணாநிதி காலனி
- காஞ்சிமரத்துரை, கூடலூர்...
கூடலூர், மார்ச் 16: கூடலூர் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் குடும்பத்துடன் குளிக்கச் சென்ற வாலிபர் ஆற்றில் மூழ்கி மாயமானார். கூடலூர் கருணாநிதி காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், தற்போது கூடலூர் காஞ்சிமரத்துறை பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். நேற்று மாலை சதீஷ்குமார் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் குளிப்பதற்காக, தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அவர், திடீரென மூச்சு திணறி ஆற்றில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையிலான குமுளி லோயர் கேம்ப் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் மூலம் ஆற்றில் மூழ்கி மாயமான சதீஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
