- போஸோ
- காங்கேயம்
- மாரிமுத்து
- பெருங்காடு
- அறந்தாங்கி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம்
- நிலக்கோட்டை
- திண்டுக்கல் மாவட்டம்
காங்கயம், மார்ச் 16: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, பெருங்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (20). கூலித்தொழிலாளியான இவர் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவிற்கு புகார் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் உள்ள தனியார் கார்மெண்ட்சில் வேலை பார்த்து வந்த மாரிமுத்துவை நேற்று காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.
