பேசல்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, தாய்லாந்து வீராங்கனை சுபனிதா கலெதாங் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சுவிஸ் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, தாய்லாந்து வீராங்கனை சுபனிதா கலெதாங் – இந்தோனேஷியா வீராங்கனை புத்ரி குஸுமா வர்தனி மோதினர். இப்போட்டியின் முதல் செட்டில் அநாயாசமாக ஆடிய சுபனிதா புள்ளிகளை எளிதில் பெற்றார்.
முதல் செட்டை 21-11 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய அவர் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட்டை 21-15 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, ஜப்பான் வீரர் யூஷி தனகா, இந்தோனேஷிய வீரர் அல்வி ஃபர்ஹான் அல்ஹஸ்னி மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய யூஷி தனகா, 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
