×

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு துவக்கம்

புதுச்சேரி: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, புதுச்சேரியில் ஆளும் தேஜ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ இடையே நேற்று முன்தினம் தொகுதி பங்கீடு முடிவானது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகள், பாஜக 14 தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டது. லஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தொகுதிகளை ஒதுக்கும் என முடிவு செய்யப்பட்டது. தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவான நிலையிலும், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாலும், காங்கிரஸ்-திமுக இடையே தொகுதி பங்கீட்டை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகேவுள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் கூட்டணிக்கு தலைமை, தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி கூறுகையில், காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. புதுச்சேரியில் திமுக அதிக இடங்களில் போட்டியிடுமா? என்பதை எங்கள் தலைவர் தான் முடிவு செய்வார். புதுச்சேரியில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது? என்பதை எங்கள் தலைவரும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அறிவிப்பார்கள். கூட்டணியில் தொகுதி பங்கீட்டை நாங்கள் முடிவு எடுப்பதில்லை, தலைமை தான் முடிவெடுக்கும் என்றார்.

தொடர்ந்து, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி கூறும்போது, பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி பேசவில்லை. நாங்கள் இரு கட்சியினரும் ஒத்துழைத்து ஒன்றாக நிற்பது என பேசியிருக்கிறோம். தொகுதி பங்கீடு சீக்கிரம் முடிவாகும். புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை யார்? என்பது சுமூகமாக முறையில் முடிவு செய்யப்படும். கட்சியின் தலைமை இதனை அறிவிக்கும் என்றார்.

Tags : Dimug- ,Congress ,Puducherry Puducherry ,Tamil Nadu ,Congress party ,Rajya Sabha ,Teja Coalition ,Puducherry, N. R. ,Mundinam ,Baja ,
× RELATED தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு!