ஊத்துக்கோட்டை: அமெரிக்கா-ஈரான் போரால், தமிழகத்தில் காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரவியது. இதனால், பெட்ரோல் பங்கில் பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் முண்டியடித்துக் கொண்டு தங்களது வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவைகளை நிரப்பி வருகிறார்கள். மேலும், காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான ஓட்டல்களை மூடப்பட்டுள்ளது.
அதைதொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் மினி ஓட்டல்களில் காஸ் சிலிண்டர் இல்லாததால் விறகு அடுப்பை பயன்படுத்தி இட்லி மற்றும் வடை ஆகியவை தயார் செய்கிறார்கள். இந்நிலையில், காஸ் சிலிண்டர் இல்லாததால் ஒரு சில ஓட்டல்களை மூடிவிட்டனர். மேலும், காஸ் சிலிண்டர் பதிவு செய்யும் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஓட்டல் உரிமையாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
