×

பேட்டரி கடை ஊழியர் தற்கொலை

சேலம், மார்ச் 14: சேலம் அழகாபுரம் ரெட்டியூர் கனரா பேங்க் காலனியை சேர்ந்தவர் யமுனா (46). இவரது கணவர் கோபாலகிருஷ்ணன் (51). பேட்டரி கடையில் வேலை செய்து வந்த இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 3ம்தேதி மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் யமுனா பணம் வழங்காமல் கணவரை கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக தின்று கோபாலகிருஷ்ணன் மயங்கினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோனார். இதுபற்றி அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Salem ,Yamuna ,Reddiyur ,Canara ,Bank ,Colony ,Azhagarpuram, Salem ,Gopalakrishnan ,
× RELATED அண்ணனிடம் கேட்டு தாக்கிய 2 பேர் கைது