வேதாரண்யம், மார்ச் 14: பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் வைரமுத்து, திருச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளர், அரசு ஊழியர் ஓய்வு நலன் பிரிவு மாநில செயலாளர் மற்றும் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில பொருளாளருமான வைரமுத்து, திருச்சிக்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.நாகை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் சிறப்பாக பணியாற்றியவரும் வைரமுத்துவை பிரதமர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பாரதப் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற வைரமுத்துவிற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திருமலை செந்தில் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.
