×

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி

கூடுவாஞ்சேரி, மார்ச் 14: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம், வள்ளலார் நகர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் முகமது ஆசிக் (35). இவர், அப்பகுதியில் ஒரு தனியார் பிரியாணி கடையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு ஜமீலா (28) என்ற மனைவியும், அமீர் அகமது எனும் 8 மாத ஆண்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு ஜமீலா பால் கொடுத்துவிட்டு, தரையில் தூங்க வைத்துள்ளார்.சிறிது நேரத்தில் 8 மாத ஆண்குழந்தை அமீர் அகமதுவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்ததும் பெற்றோர், அக்குழந்தையை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பால் குடித்ததில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக ஆண்குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Kuduvanchery ,Mohammed Asik ,Kamaraj Street, Vallalar Nagar, Madambakkam ,Jamila ,Ameer Ahmed… ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடை பயணம்