தக்கலை, மார்ச் 14: தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(43). இவர் மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் புதிய வீடு கட்டிய வகையில் இவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் விஷமாத்திரை அருந்தி மயங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்தார்.
