×

புதுவையில் 7 குழந்தைகள் மீட்கப்பட்டு பராமரிப்பு காப்பகத்தில் ஒப்படைப்பு

புதுச்சேரி, மார்ச் 14: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களான புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு தனித்தனியாக குழந்தைகள் நலக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 2015ன் கீழ் செயல்படும் அமைப்பாகும்.புதுவை குழந்தைகள் நலக்குழுவின் தலைவராக அன்பரசன் மற்றும் இக்குழுவின் உறுப்பினர்களாக சைலஜா, கார்குழலி, கிரேஸ், தனமுத்து ஆகியோரை ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி தலைமையிலான குழு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமன ஆணைகளை முதலவர் ரங்கசாமி, சமூகநலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கடந்த 3ம் தேதி வழங்கினர்.இவர்கள் பதவி ஏற்றபின், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுவையில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பத்தில் இருந்த 7 குழந்தைகளை சைல்டு லைன் அமைப்பு கண்டறிந்து மீட்டு இக்குழுவிடம் ஒப்படைத்தனர். இக்குழு, அக்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தங்குமிடம், பள்ளி கல்வி வசதியை கொடுத்து முன்னேற்றும் வகையில் குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Puducherry ,Union Territory of ,Karaikal ,Maghe ,Yenam ,Puducherry Child Welfare Committee… ,
× RELATED காட்டுமன்னார்கோவில் பகுதியில் சிறிய ரக விமானம் பறந்ததால் பரபரப்பு