×

காட்டுமன்னார்கோவில் பகுதியில் சிறிய ரக விமானம் பறந்ததால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில், மார்ச் 13: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று தாழ்வாக வட்டமடித்து கொண்டிருந்தது. இதனால் போர் விமானமாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால், இது அறிவியல் ஆய்வுக்காக வந்த விமானம் என பின்னர் தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதுபோன்ற ஆய்வுகள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெளிவான தகவல்களை அளிக்க வேண்டும், என வலியுறுத்தினர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த விமானமானது இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவின் சார்பில் தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், பகுதியில் பூமிக்கு கீழ் உள்ள கனிம வளங்களை கணக்கெடுக்கும் ஆய்வுக்கு செஸ்னா கேரவன் 208பி வகை விமானம் பயன்படுத்தப்படுகிறது. இது நிலத்தடியில் உள்ள கனிமப் படிவுகளை கண்டறிய சிறப்பு சென்சார்களைப் பயன்படுத்துகிறது. இந்த சென்சார்கள் பூமியின் அடியில் என்ன இருக்கிறது என்பதை படம் பிடித்து அனுப்பும் வேலையை செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை, என்றனர்.

Tags : Katumannargo ,Cudulumannargo, Cuddalore district ,
× RELATED கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது