சென்னை: “ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் ‘ஒன்றிய அரசு குறைவான நிதி விடுவித்த போதிலும், உரிய காலத்தில் இத்திட்டத்தினை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2,550 கோடியை விடுவித்துள்ளது’ எனவும் முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
