சென்னை: 10,12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. 2023ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தான் எழுதிய விடைத்தாள்களை கேட்டு மாணவி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அரசு தேர்வுகள் இயக்ககம், தேர்வு முடிந்த 5 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது எனக் கூறி நிராகரித்தது. விடைத்தாள் வழங்கப்படாத நிலையில் மாநில தகவல் ஆணையரிடம் மாணவி மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து மாணவி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தகவல் ஆணையர், கட்டணம் செலுத்தி விடைத்தாளை பெற்றுக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
ஒரு பக்கத்திற்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தி நகல்களைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் இனி வருங்காலங்களில் மாணவர்கள் தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தான்களின் நகலினை அரசு தேர்வுகள் இயக்கம் எவ்வளவு மாதங்கள் பராமரிக்கிறதோ அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் செலுத்தி நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட அவர், இது குறித்து மாணவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
