உசிலம்பட்டி, மார்ச் 13: உசிலம்பட்டி தாலுகா எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பவுன்ராஜா. இவரது மனைவி சாந்தா. இவர்களது மகள் ஆர்த்தி (17). பவுன்ராஜா இறந்த நிலையில், எழுமலை அரசு பெண்கள் பள்ளியின் பிளஸ் 2 மாணவியான பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகலறிந்த எழுமலை போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர். இதில் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
