×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பருத்தி ஆடைகளை அணிய அறிவுறுத்தல்

 

மதுரை, மார்ச் 13: கோடை காலங்களில் வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் ஏற்படாமல் இருந்தாலும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடித்தல் வேண்டும்.

Tags : Madurai ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்