புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வரும் 15ம் தேதி, பிசிசிஐ வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அப்போது, இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு, ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை டி20 போட்டிகளில் சுப்மன் கில் சேர்க்கப்படாத போதும், அதற்கு முன் நடந்த ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்தியா வெற்றி பெற உதவினார். 2025ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் 754 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
