×

சில்லி பாய்ன்ட்…

* 3 நாளில் தெ.ஆ. வீரர்கள் நாடு திரும்ப ஏற்பாடு
புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆட இந்தியாவுக்கு வந்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், வளைகுடா நாடுகளில் போர் வெடித்ததால் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் 9 பேர் ஏற்கனவே தங்கள் நாட்டுக்கு சென்று விட்டனர் இருப்பினும் மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள், தென் ஆப்ரிக்கா வீரர்கள் மற்றும் குழுவினர் இன்னும் 3 நாட்களுக்குள் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என ஐசிசி அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

* ஆப்கன் – இலங்கை போட்டிகள் தள்ளிவைப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே, 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. டி20 போட்டிகள் மார்ச் 13, 15, 17 தேதிகளில் ஷார்ஜா நகரிலும், அதைத் தொடர்ந்து, மார்ச் 20, 22, 25 தேதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு நாள் போட்டிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளதால், இப்போட்டிகளை நடத்த முடியாத சூழல் காணப்பட்டது. அதையடுத்து, போட்டிகளை தள்ளி வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்திய அணிக்கு ரூ. 25 கோடி பரிசு
துபாய்: உலகக் கோப்பை டி20 போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய ஆடவர் அணிக்கு, ரூ.25 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று அறிவித்தது. ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறும் அணி மற்றும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற ரீதியில் புதிய வழிமுறைகள் கடந்த 2024ம் ஆண்டு வகுக்கப்பட்டன. அதன்படி, இதுவரை வழங்கப்பட்டதை விட அதிகபட்சமாக தற்போது இந்திய அணிக்கு அதிக பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Tags : South Africa ,New Delhi ,India ,World Cup T20 ,outbreak ,Gulf ,
× RELATED ஜிம்பாப்வே மகளிருடன் 3ம் ஓடிஐ: ஈசியா வென்ற நியூசி வாஷ்அவுட் செய்து அசத்தல்