திருச்சி: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் தனியார் ஓட்டலுக்கு வந்து விட்டு, பின்னர் அங்கிருந்து சேலத்துக்கு கிளம்பினார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
பியூஸ் கோயலுடன் இருமுறை தேர்தல் தொடர்பான ஆலோசனையில் தான் ஈடுபட்டேன். தொகுதி பங்கீடு பற்றி பேசப்படவில்லை. அது குறித்து பேசும் போது நாங்கள் தெரிவிப்போம். தவெக உடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இல்லை என்று கூறும்போது நடத்துவீர்களா? என்ற கேள்வி தேவையில்லாதது. எனக்கு தெரிந்த வரை எங்கள் கூட்டணி கட்சியினரும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தவெக தலைவர் விஜயை சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது. இதனால் விஜய்க்கு அழுத்தம் இல்லை. அனைவர் மீதும் வழக்கு இருக்கிறது. என் மீதும் வழக்கு இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறது. டெல்லியில் நடக்கவில்லை. எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.
