×

தாக்குதல் நடத்துவதற்கு ஈரானில் தற்போது எதுவும் இல்லை; போர் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப் அறிவிப்பு

 

வாஷிங்டன்: ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில் போர் நீடிக்கும் என இஸ்ரேல் அமைச்சர் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா திடீரென அந்நாட்டின் மீது கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை அடைத்தது.

இதனால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட கொண்டு செல்ல முடியாது என எச்சரித்துள்ள ஈரான் ராணுவ அதிகாரி போர் தொடர்ந்தாள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 200 டாலராக உயரும் என்று அதிர்ச்சி அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீபா துறைமுகத்தில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த எண்ணெய கப்பலில் இந்தியாவுக்காக 30,000 டன் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டது.

இந்த கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி வழியாக பேட்டியளித்த டிரம்ப்; ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போது அங்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். எனவே விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். அதே சமயம் எந்த ஒரு காலக்கெடுவும் நிர்ணயிக்காமல் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags : Iran ,Trump ,Washington ,minister ,US ,President ,
× RELATED ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி!!