தெஹ்ரான் : அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர 3 நிபந்தனைகளை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் விதித்துள்ளார். ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரிப்பது, சேதத்திற்கு இழப்பீடு வழங்குவது, எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தப்படாது என்ற உத்தரவாதங்களை வழங்குவதே போரை முடிக்க ஒரே வழி எனத் திட்டவட்டமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
