×

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு

புதுக்கோட்டை, மார்ச்12: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சிலைக்கு இரும்பு கூண்டு அமைத்து பூட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு சாவி காவல்துறையினரிமும், மற்றொரு சாவி நீதிமன்றப் பணியாளர்களிடமும் உள்ளது. அம்பேத்கர் பிறந்தநாள், நினைவு நினைவு நாட்களில் மட்டும் பூட்டை திறக்க வைத்து அவரது சிலைக்கு மரியாதை செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அம்பேத்கரின் தலையில் சரிகை துண்டால் முண்டாசு கட்டி அவமதிக்கப்பட்டிருந்தது புதன்கிழமை காலை தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. எந்த நேரமும் மக்கள் நடமாடும் பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்படுத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டுமெவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ambedkar ,Pudukkota ,Pudukkottai ,Marxist Communist Party ,Tamil Nadu Destruction Front ,Annal Ambedkar ,Pudukkottai Old Bus Station ,CBM District ,S. Shankar ,
× RELATED பொதுக்கூட்டத்தில் குட்கா பறிமுதல்