×

முத்தையாபுரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

ஸ்பிக்நகர், மார்ச் 12: முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3வது தெருவை சேர்ந்த பாக்கியராஜ் மனைவி செந்தூர்கனி(66). நேற்று முன்தினம் மாலை இவரது மகன் ஜேசுராஜ் மது அருந்தி விட்டு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜேசுராஜின் மனைவி அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக செந்தூர்கனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் வந்து உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்தார் நோன்பு திறப்புv கோவில்பட்டி, மார்ச் 12:கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஆயிஷா மசூதியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நோன்பு இருக்கும் 300 பேருக்கு பேரீச்சம்பழம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மஸ்ஜிதே ஆயிஷா பள்ளி தலைவர் பட்டாணி மஸ்தான், செயலாளர் ஷாகுல் ஹமீது, துணை செயலாளர் சம்சுகனி, ஒன்றிய துணை தலைவர் சீனிவாசன், கிளை செயலாளர்கள் குருசாமி, சுரேஷ், நிர்வாகிகள் சங்கர், ஐடி விங்க் கற்பகம் மற்றும் இஸ்லாமியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ancestor ,Muthayapuram SPIGNAGAR ,BHAKIARAJ ,SENTHURGANI ,MUTHAIAPURAM KUMARASAMI NAGAR 3RD STREET ,Jessuraj ,Jaesuraj ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்