- துணை முதலமைச்சர்
- கிருஷ்ணகிரி
- சட்டமன்ற உறுப்பினர்
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
- தர்மபுரி...
கிருஷ்ணகிரி, மார்ச் 12: கிருஷ்ணகிரிக்கு நாளை (13ம் தேதி) துணை முதல்வர் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாளை (13ம் தேதி) கிருஷ்ணகிரிக்கு வருகிறார். தர்மபுரியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கிருஷ்ணகிரி வரும் அவர், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நாளை மாலை நடைபெறும் விழாவில் அரசின் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். துணை முதல்வர் வருகையை முன்னிட்டு அரசு விழா நடைபெறும் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் மதியழன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து துணை முதல்வர் வரும் பாதை, தங்கும் இடம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், ஏடிஎஸ்பி சங்கர், திமுக நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
